Thursday, November 08, 2018

புன்னகையின் மரணம்!


அன்பில் தோன்றிய நட்பை அறிந்த இவ்வுலகம்,
அன்றொரு நாள் புன்னகையில் தோன்றிய நட்பை அறிந்தது!
ஒரு தலை நட்பு , ஈருடல் கொண்டது!
ஈருடலில் ஓருடல் குழந்தை போன்ற அந்த உள்ளத்தை ,
வான் மழையின் சாரல் என கொண்டாடியது!
தீரா புன்னகை இது என மனம் கூத்தாடியது!
கொஞ்சம் கோபம் , நிறைய மன்னிப்பு,
கொஞ்சம் சந்தோசம் , நிறைய அக்கறை என
தூரங்கள் கடந்தன! - பின்பு
கொஞ்சம் சிரிப்பு, நிறைய வெறுப்பு என
காலங்கள் மாறின!
உண்மை நட்பு இதுவென அறியாமல்,
மனம் வீழ்ந்தது!
வீழ்ந்த மனம் , கைகளை தூக்கி
மழையின் சாரலை நோக்கி நீட்டியது!
சாரலோ குத்தீட்டீகளாய் குத்தியது!
இது ஒரு தலை நட்புதான் என
உள்ளம் கடைசியாய் ஒருமுறை புன்னகைத்தது!
அதன் பின்பு, நட்பை தாங்கிய அந்த புன்னகை
மெல்ல மெல்ல நட்பு தீர்ந்து - இறுதியில்
அமைதியாய் மரணித்தது!

No comments: