Friday, April 15, 2011

பிறந்த நாள் வாழ்த்துக்கள்


இயற்கையே!
வானிற்கு மாறாத நீலம் தந்தாய்!...
நீல வானில் நட்சத்திரங்கள் பதித்தாய்!..
வாசம் நீங்கா மலர்கள் தந்தாய்!..
இசை குறையாத ஒலி தந்தாய்!.. 
அதிகாலை பனி துளி தந்தாய்!..
விழிகள் மூடும் உறக்கம் தந்தாய்!..
உறக்கம் கலையுமுன் கனவுகள் தந்தாய்!..
உன் படைப்புகள் இத்தனை தான் என்று
நான் வியந்து நிற்க..
உண்மை பேசும் இதழ்கள் செய்தாய்!..
கனவுகளை நிஜமாக்கும் கண்கள் செய்தாய்!..
மலரினும் மெலிதாய் இதயம் செய்தாய்!..
பொய்களை சுடும் வீரம் தந்தாய்!..
சித்திரை வெயிலை பனித்துளியில் நனைத்தாய்!..
உருவம் தந்தாய்!.. உயிர் செய்தாய்!..
இதோ என் முன் நிலவாய்!..
பாட்டி சொல்லும் கதைகளில் வரும் தேவதையாய்!..
தமிழ் கூறும் கவிதையாய்!.. 
என் முன்னே நிறுத்தியிருகிறாய்!..
என்ன சொல்லி நான் இவளை வரவேற்க,
"என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!"
உன் கால் தடம் படும் நிலங்கள் பூக்கட்டும்!.. 
கலையாத நினைவுகளுடன்,
- மூவேந்தன்