Sunday, May 17, 2009

காதலின் பரிசு!



உன் ஈரமான இதழ்களில்
என் தாகம் தீர்த்தேனே!
உன் இடை தழுவி வந்த காற்றிலே
சுவாசம் மறந்தேனே!
உந்தன் மார்பினில் படுக்கையில்
உறக்கம் மறந்தேனே!
உன் ஸ்பரிசம் பட்ட நொடியில்
உலகையே மறந்தேனே!
தழுவிய கைகளில்
தவறாமல் சிக்கினேனே!
முதல் பரிசாய் முத்தம் தந்தாய்!
முடிவிலா இன்பம் தந்தாய்!
இத்தனைதான் இன்பமென
நான் நினைக்க - அதையும் தாண்டி
தந்தையெனும் இன்பம் தந்தாயே!
நன்றி சொல்ல நான் வந்தால்
எனக்கும் தாயுமானாயே!