Friday, December 18, 2009

மறந்து போன கவிதை




மஞ்சளும் சிவப்புமாய் அந்தி வானம்....
நிலவின் உடையை மலைகளுக்கு பின்னால் 
மாற்றி கொண்டிருக்கும் சூரியன்...
பனித்துளியின் பரிசத்தில் 
பச்சையாய் பல்லிளித்து காட்டும் இலைகள்....
மனதை வருடும் மகிழம் பூக்களின் வாசனைகள்...
எனக்கான நாளைய கனவுகளை 
மெல்ல மெல்ல சுமந்து வரும் இருள்.. -- என 
இவை அனைத்தும் இருந்தும்,
அவற்றை பற்றி கவிதை எழுதாமல் 
உன் மழலை சிரிப்பையே 
ரசித்து கொண்டிருக்கிறேன்!