Thursday, November 08, 2018

காதல்

உன் விழி இனி, எனை தேடும்!
மலர் கரம் , எனை தீண்டும்!
இசை மொழி, காதல் சொல்லும்!
காதல் தீண்டி, மனம் உருகும் !
உருகி உருகி , உயிர் வாடும்!
அவள் துன்பம், இனி எனதாகும்!

கொஞ்சம் சிரித்தாய்!
கொஞ்சி கொஞ்சி சிரித்தாய்!
நான் சிறிது இறந்தேன்!
சிறிது சிறிதாய் இறந்தேன்!
கடந்து செல்ல தூரம்
இல்லா பாதை வேண்டும்!
பாதை தூரம் எனில் , கை பிடித்து
நடக்க நீ வேண்டும் !
மொழிகள் ஏதுமின்றி சுற்றி திரிவேன்,
உன் நினைவுகள் தொலைந்துவிட்டால்!

என் தமிழை பேச வைத்தாய்!
கவிதை என சொல்லி
ஏதோ கிறுக்க வைத்தாய்!
விழியில் ஆரம்பித்து புன்னகையில் முடிவது காதல்!
இதோ இந்த கவிதையையும்,
உன் இதழ் ஒர புன்னகையில்
முடித்து வைக்கிறேன் !

No comments: