Tuesday, May 05, 2009

உணர்வுகள்...

மகிழ்ச்சியை கண்கள் சிரிக்க கூறு!
பிரிவை இதயம் துடிக்க கூறு!
கோபத்தை பக்குவமாய் கூறு!
பாசத்தை அன்பு வழிய கூறு!
காதலை வெக்கம் சிவக்க கூறு!

நட்பு..

நட்பு என்பது நம்மிடம் உள்ள
அழகான உணர்வு - அது
பிறரிடம் போய் சேரும் போதுதான்
பெருமையடைகிறது...

செல்வந்தன்...

நீ என் பொழுதுகளை திருடும்
ஒவ்வொரு தடவையும்
நான் மேலும் மேலும்
செல்வந்தன் ஆகிறேன்!

துயரம்...


சில மௌனங்கள் உடைக்கப்பட வேண்டும்!
பிரிந்த உறவுகளில் ஏற்படும் மௌனங்கள்
ஓட்ட முடியாத உடைந்த உறவுக்கு
இட்டு செல்லும்....
சில மௌனங்கள் உடைக்கப்பட வேண்டும்!
என் மௌனத்தை நான் உடைக்கிறேன்.
நம் களங்கமில்லா நட்பு இன்னும் சிறிது
காலம் பிழைத்து இருப்பதற்கு..

காத்திருப்பு..


உன்னிடம் நான் பேச நினைக்கும்
வார்த்தைகள் எல்லாம் காற்றிலே
கரைந்து விடும் முன்
சீக்கிரம் வா பெண்ணே!

கவிதை

அவள் முகம் பார்த்து
என் இதழ்கள் உதிர்க்கும்
அர்ச்சனை பூக்கள் தான் இந்த கவிதைகள்..

வெளிச்சம்

உன் கைப்பிடித்து நடந்த
அந்த பத்து நிமிட பயணத்தில் மட்டுமே
வெளிச்சத்தை பாத்தேன்..

காதல்

மாற்றத்தை தந்து விட்டாய்!
தடுமாற்றத்தை தந்து விட்டாய்!
நினைவில் வந்து விட்டாய்!
என் உயிரோடு கலந்து விட்டாய்!
எத்தனை வருடங்கள் காத்திருந்தேன்
இத்தனை சுகங்கள் காண்பதற்கு..
உன் கரு விழியில் - என்
இரு விழி பார்வை தொலைந்ததனால்..
உன் அங்கங்களை பார்க்கும்
வாய்ப்பு இல்லை எனக்கு!
ஆனால் உன் உள்ளத்து மலர் தோட்டத்தில்
புத்தம் புதிய ரோஜாவாய் மலர்ந்தேன்!..

மாற்றங்கள்....

எத்தனை மாற்றங்கள் உன்னிடத்தில்!-இன்று
எத்தனை மாற்றங்கள் உன்னிடத்தில்...
வெள்ளை பனிக்கீற்று உன் நெற்றியில்!
முல்லை பூ வாசம் உன் கூந்தலில்!
வெள்ளை சிரிப்புகள் உன் செவ்வாயில்!
அழகாய் வரைந்த தங்க கோடுகள்
உன் சங்கு கழுத்தில்!
மாறாத தாயன்பு போல,
மாறாத மழலை சிரிப்பு போல,
உன்னுடைய மாற்றங்களும்
மாறாமல் இருக்கட்டும்...

ஒரு காதல் கடிதம்

அற்றை திங்கள் அந்நிலவில்
ஒற்றை பூவாய் நீ மலர்ந்தாய்...
எட்டு திக்கும் என் மனம் அலைந்தால்,
ஒன்பதாம் திக்கில் எனை இழுப்பாய்..
உன்னை நினைத்த நெஞ்சம் வேகுதடி..
உன்னை பார்த்த கண்கள் சாகுதடி..
நினைத்து நினைத்து பார்க்கிறேன்
ரசித்து ரசித்து உணர்கிறேன்...
உன்னை பார்த்தும் காதல் வந்ததோ!
காதல் வந்ததும் உன்னை பார்த்தேனோ!
இறுகிய என் மனம் பனியாய் உருகியதே!
இளகிய உன் மனம் என் காதலை உணராதோ!
சொல்லடி என் கண்மணி நான் உந்தன் உயிரென்று!

Good night

உன் கரு விழிகளால்
இருட்டுக்கு வெள்ளை அடிக்காமல்
சீக்கிரமே தூங்கு!..

என் உயிர் தோழி - 2

எனக்கு பிடித்த ஒரே தோழி நீதான்!
ஏன் என்றால் ?
என் இதயம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும்
உன் கண்கள் கூட
சிரிப்பு signal காட்டுகிறதே...

என் உயிர் தோழி - 1

என் உயிர் தோழி!
நான் மறந்த நிமிடங்களை
எனக்காக மீட்டு தருபவள்!
என் கலைந்த கனவுகளில்
ஒளி குறையாத நிலவு அவள்!
சுவாசிக்க மறந்த எனக்கு, உயிர் மூச்சாய்
நட்பை தந்தவள் அவள்!
நான் தூரத்து வெளிச்சம் நோக்கி நடக்க,
அவளுடைய பத்து விரல்களில்
சுண்டு விரல் மட்டும் எனக்கு போதும்...
உணர முடியாத உணர்வுகளுடன்
உன் உயிர் தோழன்.......