Friday, December 18, 2009
மறந்து போன கவிதை
Tuesday, September 22, 2009
Wednesday, September 16, 2009
நான் ஏன் மனிதனாய் பிறந்தேன்.
இது முதல் தடவை அல்ல, நான் இப்படி யோசிப்பது. தினம் தினம் சாலையில் நடக்கும் போதோ அல்லது ஏதோ ஒரு பேருந்தில் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து செல்லும் போதோ, இதை நான் யோசிப்பேன். இந்த எண்ணங்கள் எனக்குள் எப்படி வந்தது என்று தெரியவில்லை. இதனை நான் ஆராய்ச்சி செய்ய முயலும் போதெல்லாம் என் கண்முன்னே நிழல் போல பல விஷயங்கள் வந்து போயின.... அந்த நிழல்கள் என் மனதுக்கு சிறிது வெளிச்சத்தை தந்தன...
Thursday, May 28, 2009
Tuesday, May 26, 2009
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Sunday, May 17, 2009
காதலின் பரிசு!
உன் ஈரமான இதழ்களில்
என் தாகம் தீர்த்தேனே!
உன் இடை தழுவி வந்த காற்றிலே
சுவாசம் மறந்தேனே!
உந்தன் மார்பினில் படுக்கையில்
உறக்கம் மறந்தேனே!
உன் ஸ்பரிசம் பட்ட நொடியில்
உலகையே மறந்தேனே!
தழுவிய கைகளில்
தவறாமல் சிக்கினேனே!
முதல் பரிசாய் முத்தம் தந்தாய்!
முடிவிலா இன்பம் தந்தாய்!
இத்தனைதான் இன்பமென
நான் நினைக்க - அதையும் தாண்டி
தந்தையெனும் இன்பம் தந்தாயே!
நன்றி சொல்ல நான் வந்தால்
எனக்கும் தாயுமானாயே!
Tuesday, May 05, 2009
உணர்வுகள்...
மகிழ்ச்சியை கண்கள் சிரிக்க கூறு!
பிரிவை இதயம் துடிக்க கூறு!
கோபத்தை பக்குவமாய் கூறு!
பாசத்தை அன்பு வழிய கூறு!
காதலை வெக்கம் சிவக்க கூறு!
செல்வந்தன்...
நீ என் பொழுதுகளை திருடும்
ஒவ்வொரு தடவையும்
நான் மேலும் மேலும்
செல்வந்தன் ஆகிறேன்!
காதல்
மாற்றத்தை தந்து விட்டாய்!
தடுமாற்றத்தை தந்து விட்டாய்!
நினைவில் வந்து விட்டாய்!
என் உயிரோடு கலந்து விட்டாய்!
எத்தனை வருடங்கள் காத்திருந்தேன்
இத்தனை சுகங்கள் காண்பதற்கு..
உன் கரு விழியில் - என்
இரு விழி பார்வை தொலைந்ததனால்..
உன் அங்கங்களை பார்க்கும்
வாய்ப்பு இல்லை எனக்கு!
ஆனால் உன் உள்ளத்து மலர் தோட்டத்தில்
புத்தம் புதிய ரோஜாவாய் மலர்ந்தேன்!..
மாற்றங்கள்....
எத்தனை மாற்றங்கள் உன்னிடத்தில்!-இன்று
எத்தனை மாற்றங்கள் உன்னிடத்தில்...
வெள்ளை பனிக்கீற்று உன் நெற்றியில்!
முல்லை பூ வாசம் உன் கூந்தலில்!
வெள்ளை சிரிப்புகள் உன் செவ்வாயில்!
அழகாய் வரைந்த தங்க கோடுகள்
உன் சங்கு கழுத்தில்!
மாறாத தாயன்பு போல,
மாறாத மழலை சிரிப்பு போல,
உன்னுடைய மாற்றங்களும்
மாறாமல் இருக்கட்டும்...
ஒரு காதல் கடிதம்
அற்றை திங்கள் அந்நிலவில்
ஒற்றை பூவாய் நீ மலர்ந்தாய்...
எட்டு திக்கும் என் மனம் அலைந்தால்,
ஒன்பதாம் திக்கில் எனை இழுப்பாய்..
உன்னை நினைத்த நெஞ்சம் வேகுதடி..
உன்னை பார்த்த கண்கள் சாகுதடி..
நினைத்து நினைத்து பார்க்கிறேன்
ரசித்து ரசித்து உணர்கிறேன்...
உன்னை பார்த்தும் காதல் வந்ததோ!
காதல் வந்ததும் உன்னை பார்த்தேனோ!
இறுகிய என் மனம் பனியாய் உருகியதே!
இளகிய உன் மனம் என் காதலை உணராதோ!
சொல்லடி என் கண்மணி நான் உந்தன் உயிரென்று!
என் உயிர் தோழி - 2
ஏன் என்றால் ?
என் இதயம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும்
உன் கண்கள் கூட
சிரிப்பு signal காட்டுகிறதே...
என் உயிர் தோழி - 1
நான் மறந்த நிமிடங்களை
எனக்காக மீட்டு தருபவள்!
என் கலைந்த கனவுகளில்
ஒளி குறையாத நிலவு அவள்!
சுவாசிக்க மறந்த எனக்கு, உயிர் மூச்சாய்
நட்பை தந்தவள் அவள்!
நான் தூரத்து வெளிச்சம் நோக்கி நடக்க,
அவளுடைய பத்து விரல்களில்
சுண்டு விரல் மட்டும் எனக்கு போதும்...
உணர முடியாத உணர்வுகளுடன்
உன் உயிர் தோழன்.......