Thursday, November 08, 2018

நான்

நான் என்பது இந்த உடலா...
உணர்வும் அறிவும் கலந்த மனமா...

உடலின் முதுமை,
மனதின் முதுமை..
எதை உன்னால் தடுக்க முடியும்..

எதை தடுத்தாலும் ,
இறப்பை உன்னால் தடுக்க முடியுமா..

காலம் இறவாது....
நீ இறப்பாய்...
உன் உடல் துர்நாற்றமடிக்கும் பிண்டமாகும்..
உன் மனம் இருளில் தொலைந்த நிழலாகும்...
காலம் உன்னை மறக்கடிக்க செய்யும்..
அடையாளமற்று போவாய்..

உன் அன்பின் வரலாறோ..
அல்லது வெறுப்பின் வரலாறோ...
எதுவும் காலத்தின் முன் கரைந்து போகும்...

இந்த நீண்ட நெடிய வாழ்க்கையின் பயணம் ,
இன்பத்திற்கானதா?
துன்பத்திற்கானதா?
இந்த பயணம் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம்..

ஆனால் பயணத்தின் முடிவில்,
அர்த்தமற்ற முற்றுப்புள்ளியில்
மறைந்து போகிறாய்...

வாழ்க்கையே ஓர் அர்த்தமற்ற துன்பம்,
நாம் சந்திக்கும் மனிதர்களிடத்திலாவது
அன்பை தர முயற்சிப்போம்..

No comments: