Thursday, November 08, 2018

பிரிவென்பது யாதெனில் !



எல்லாருக்கும் வணக்கம்.
எல்லாருக்கும்னா "எல்லாருக்கும்" தான் (நண்பன் 1,நண்பன் 2, நண்பன் 3, நண்பன் 4,....).

இன்றைய பிறந்தநாளுடன் , ஏதோ ஒன்று முழுமையடைந்து சற்றே ஓய்வெடுக்க போகிறது. அந்த ஏதோ ஒன்று, நம்மிடையே , நாமே உணராமல் அனுபவித்த நட்பின் சுகமான மகிழ்ச்சி தருணங்கள் !
இது தற்காலிக ஓய்வாக இருக்கலாம். ஆனால் , நிரந்தர ஓய்வாக இருக்க முடியாது என்று நம்புகிறேன்..

மகிழ்ச்சியான தருணங்களை , நினைவுகளாக்கி , நண்பன் 1 சற்றே விலகி செல்ல போகிறான்..

இன்று நண்பன் 1...
நாளை வேறு ஒருவர் திருமணமாகி பிரியலாம்,
மற்றொருவர் நண்பன் 1 போல வேலை கிடைத்து பிரியலாம்..

எல்லோரும் இங்கே பிரிந்து செல்லவே நட்புடன் வாழ்கிறோம்..

எல்லோரும் பிரியலாம்...
காலங்கள் கடக்கலாம்..
சிலரின் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படலாம்..
நம் நட்பை இதயத்தின் ஏதோ ஒரு ஓரத்தில் வைத்து ,
நண்பர்களை மறந்து வாழலாம்...
தோல்கள் சுருங்கி ,
கண்ணின் ஒளி மங்கி ,
இருளில் ஒளிந்து வாழும் அந்த நாளில்...
நினைவுகள் மீண்டும் அசை போடும்..
நட்பு உயிர்த்து எழும்..
நண்பர்களை தேடும்..
சிலர் முன்னதாக  இறந்திருக்கலாம்..
சிலர் நம்மை போல சுருங்கிய தோல்களுடன்
உனக்காக காத்திருக்கலாம்...

அப்படி ஒரு தருணத்தில் ,
உனக்கு முன்னதாக நான் இறந்திருந்தால் ,
என் பிள்ளைகளிடம் நம் நட்பின்
கதையை சொல்லியிருப்பேன்.
நீ வந்து கேட்டு  தெரிந்து கொள்..

நீ எனக்கு முன்னதாக இறந்திருந்தால்,
மௌனமாய் உன்னை திட்டிவிட்டு ,
எனக்கான இறுதி நாளை
உன் நினைவுகளோடு எதிர்பார்ப்பேன்.

நாம் உயிரோடு சந்தித்து கொண்டால்,
அதை விட மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை.
மீண்டும் புதியதாய் கதை பேசி,
திட்டி கொண்டு,
கோபித்து கொண்டு,
சண்டையும், அன்புமாய்
மீண்டும் நட்பு கொள்வோம்.


No comments: