Thursday, November 08, 2018

பிரிவு



நீரில் தெரியாது போன உன் கண்ணீர்,
என் மனதில் வழிந்தோடுவது ஏன்?

உன் நினைவில் தேயாத துன்பம்,
என்னை உருக்குவது ஏன்?

உன் கண்களின் சோகம் ,
என் இதயத்தில் தங்குவது ஏன்?

உன் கனவுகளை விரட்டும் வெளிச்சம்,
என்னை ஏன் சுடுகின்றன?

உன் மனதின் காயங்கள்,
எனக்கு ஏன் தீரா வலியை
தருகின்றன?

நீ தொடரும் மௌனங்கள்,
என் காதில் பேரிரைச்சலாய் மாறுவது ஏன்?

என் மனதின் வெறுமையெல்லாம்,
உன் கலைந்து போன கனவுகளே..

ஒளியின் தீக்கதிர் என்னை வாட்டினாலும்,
என் நிழல் உன் மீது என்றும் விழும்..

வேர்களே விலகி போனாலும்,
உன்னை நான் வீழாது தாங்குவேன்..

பேராற்றங்கரையில், என் விரல்களை தழுவி செல்லும்
நீரலை நீ..

நீ வற்றினால், என் உயிர் வாடும்,
நீ என்னை அனைத்தால்,
என் உயிர் வாழும்..


என்றும் தீரா நட்புடன்,
நான் 

No comments: