Thursday, November 08, 2018

என்னுயிர்




தீரா நதியொன்றின்,
சின்னஞ்சிறு அலை நீ..
அலை போகும் திசையில்
மிதக்கும் இலக்கில்லா படகு நான்...

நீளும் ஒற்றை பாதையில்,
தனியொரு மரமாய் நீ...
உன் நிழலில் இளைப்பாறும்
வழியறியா வழிப்போக்கன் நான்..

நீண்டதொரு  பெருங்கனவின்
சிறு வெளிச்சம் நீ..
வெளிச்சம் தேடும்
விட்டில் பூச்சியாய் நான்..

உன்னோடு நான் செல்லும் தருணமெல்லாம்,
நான் தொலைத்த நிமிடங்கள்...

என் உயிர் தேடி
நான் சென்ற பயணங்கள் எல்லாம்,
உன்னில் முடிந்து
புதிதாய் தொடங்கியதே...

காற்றில் கரையும்
உன் மொழி கூட,
என்னுள் கவிதை செலுத்தி,
காதல் சொன்னதே...

இரவின் நிலவு
சாய்ந்தும் கூட,
உன் கண்ணின் ஒளி,
என்னை சாய்க்கிறதே...

முடிவில்லா என் கனவின்
தொடக்கம் நீ..
என் கனவோடு தோன்றும்
தொடு வானம் நீ...
தொடு வானம்
தூரம் சென்றாலும்,
நான் எட்டி பிடிக்கும்
தூரத்தில் இருக்கும்
நட்சத்திரம் நீ...

புதிதாய் நானும் பிறக்கிறேன்,
ஒவ்வொரு முறையும், உன்
கண் சிமிட்டலில்
என்னை அழைக்கும் போது....
அழகாய் நீயும் சிரிக்கிறாய்,
என் அன்பில் உன்னை
கொல்லும் போது....

பெருங்கனவோடும்,
இந்த கவிதையோடும்,
உன் புன்னகையோடும்,
உன் , என் வாழ்வில்,
நம் வாழ்வை
தொடங்குவோம்...

















No comments: