Sunday, December 01, 2013

பேசா மொழி!

எப்போதும் நிசப்தமாய் இருப்பதற்கு
மௌனம் ஒன்றும் ஊமை அல்ல!
மௌனம் ஒரு பேசா மொழி!
மௌனம் உணர்வுகளின் கதவு!
பூட்டப்பட்ட உணர்வுகள்,
பிரிவின் துயரமாய் இருந்து - இறுதி வரை 
மௌன குரலாய் மடிந்து போகின்றன!
மௌனத்தின் சாவி நம்மை அறியாமல் 
களவாடப்படுகிறது!
களவாடிய மனதுக்கு மௌனத்தின் 
வலிகள் புரிவதில்லை! - 
இல்லை! இல்லை!
பல சமயங்களில் அதற்கு மௌனமே புரிவதில்லை!
புரிந்து கொள்ளப்படாத என் மௌனத்தின் ஏமாற்றம்,
கண்ணீரை மௌனமாக்கியது!
மொழிகளை மௌனமாக்கியது!
உணர்வுகளை மௌனமாக்கியது!
இரவின் இருட்டு மௌனத்தின் போர்வையனது!
மௌனத்தின் கண்களோ விடியாத இரவுக்காக 
சப்தமாய் வேண்டி கொள்கிறது!

1 comment:

selva.k said...

superb da..nice one