Tuesday, December 18, 2012

நினைவுகளோடு!

சூது கவ்வும் வேளையில்,
வீதி வெளி போனேன்!
பாதி வழியிலே மறிக்கப்பட்டு,
நாதியற்று நின்றேன்!
மறித்த பூதம் உயிரை கேட்டால் குடுத்திருப்பேன்!
இதயம் பிடுங்கி,
குருதியில் கண்ணீர் கலந்து அனுப்பியது!
கண்ணீர் ஒன்றும் என் வாழ்வின் 
சித்தம் அல்லவே!
கண்ணை மூடி கண்ணீர் மறைத்தேன்!
அடங்க மறுத்த துளிகள்,
இல்லாத இதயத்தை 
நனைக்க வழிந்தோடியது!
வெறுமை உணர்ந்த துளிகள்,
என்னுள் தீராது தங்கி போன 
நினைவுகளை தேடி சென்றது!
இதயம் இல்லா நினைவுகள்,
வலிகள் தான் சுமக்கும் என்பதை,
நான் அறியாதவனா?
காயங்களான என் நினைவுகளை 
உப்பு துளிகள்,
மோசமாய் துளைத்தன!
என் தேகத்தை சுருக்கிடும் காலமே!
என் வலி தரும் நினைவுகளை மட்டும் 
ஏன் இளமையாய் வைத்திருக்கிறாய்!
மூடிய இமைகளுக்குள்ளும்,
தெளிவாய் ஓடும் நினைவுகளே!
நீ எனக்கு மட்டும் சொந்தம் அல்ல!
என் இமை பார்த்து இதயம் சிரிக்க பேசிய 
இதழ்களை நீ அறியவில்லையா?
நினைவுகளே!
உங்களின் நினைவுகளை தொலைத்து விட்டு,
எனக்கு மட்டும் வலி தருவது ஏனோ?
கண்ணீர் கலந்த பூதமே,
என் இதயத்துடன் நினைவுகள் 
இலவச இணைப்புதான்!
தயக்கம் வேண்டாம்,
என் உயிரோடு நினைவுகள் கலந்து மறையும் முன்,
துரிதமாய் வந்து எடுத்து செல்!
வலி சுமக்கும் நினைவுகளோடு,
உன் வழி நோக்கி காத்திருக்கிறேன்!

No comments: