Tuesday, December 18, 2012

நெருப்பு!


நெருப்பின் மேலே நிற்கிறோம்!
நெருப்பின் மேலே நிற்கிறோம்!
மனிதனாய் பிறந்த நாம்,
நெருப்பின் மேலே நிற்கிறோம்!
வலியின் வேதனை உணரும் போது 
எரிதனல் வேகம் கூடுதே!
வலியில்லா வாழ்க்கை, 
உயிரில்லா உடலுக்கு மட்டும் சொந்தமோ!
செந்தனல் காற்று தேகம் கருக்குதே!
வழியில்லா கண்கள் 
வலி தாங்காது அழுதே!
வீசும் குளிர் தென்றலும் - வெப்பம்தான் 
கக்கும் எனில் சுவாசிக்க 
நாசி எதற்கு!
பொய் முகம் அழகென்று - கவி 
பாடும் இவ்வுலகில்  - முகங்கள் 
தாமே தொலைகின்றனவே!
தலைமுறைகளின் தாகம் தணிக்க
நிபந்தனையற்ற சாட்சிகளாய் மாறிப்போனோமே!
நெருப்பின் வேகம் கூட கூட 
வன்மம் மனதை முழுதாய் முழுங்குதே!
வெற்று வார்த்தைகளில் 
நெருப்பு அனைவதில்லை!
எனக்காக நீ சிந்தும் கண்ணீரில் 
நெருப்பு அனையுமே!
கண்ணீர் சிந்த நட்பு இல்லையெனில் 
கருகுவதை தவிர - வேறு 
வழி இல்லையோ!
நட்பை தொலைத்து,
எரிந்து சாம்பலாய் போகும் சருகுகளாய்,
ஏன் மாறிப்போனோம்!
மனிதத்தை தொலைத்து 
இருக்கும் போதே இறந்தும் போனோம்!

No comments: