Tuesday, December 18, 2012

மேகங்கள்!


மேகங்கள் தானாய் உருவாவதில்லை! 
என் வாழ்வின் மிக சிறிய ஒரு பகுதியில்,
நானும் மேகங்களை உருவாக்கினேன் !
மிக கருமையாய்!
மிக அடர்த்தியாய்!
எத்தனை பெரிது என்று கர்வமும் கொண்டேன்!
குளிர் மழை பொழிந்து,
மனம் மகிழும் தருணம் 
எதிர் பார்த்து காத்திருந்தேன்!
சட்டென்று வீசிய,
பெரிதெனவோ சிறிதெனவோ 
அனுமானிக்க முடியாத,
ஒரு காற்றின் வேகத்தில்,
மேகங்கள் கலைந்தே போயின!..
ஒரு சிறு துளி கூட- நிலத்தை
நனைக்கவில்லை!.. 
நான் கண்ட மேகங்கள்
அனைத்தும் காட்சி பிழையோ?
அல்லது வீசியது புயல் காற்றா?
யார் தவறோ?

ஈரம் பாரா இந்த நிலத்தில் - இனியும்
பூக்கள் பூக்க போவதில்லை!. 
பூக்களை எதிர் பார்த்து நீ இல்லை எனில், 
என் புன்னகையை தருகிறேன்.
இது நான் மேகங்கள் செய்ய தூண்டிய அன்பை 
சிறிதேனும் உனக்கு சொல்லக்கூடும்!

No comments: