Tuesday, May 05, 2009

ஒரு காதல் கடிதம்

அற்றை திங்கள் அந்நிலவில்
ஒற்றை பூவாய் நீ மலர்ந்தாய்...
எட்டு திக்கும் என் மனம் அலைந்தால்,
ஒன்பதாம் திக்கில் எனை இழுப்பாய்..
உன்னை நினைத்த நெஞ்சம் வேகுதடி..
உன்னை பார்த்த கண்கள் சாகுதடி..
நினைத்து நினைத்து பார்க்கிறேன்
ரசித்து ரசித்து உணர்கிறேன்...
உன்னை பார்த்தும் காதல் வந்ததோ!
காதல் வந்ததும் உன்னை பார்த்தேனோ!
இறுகிய என் மனம் பனியாய் உருகியதே!
இளகிய உன் மனம் என் காதலை உணராதோ!
சொல்லடி என் கண்மணி நான் உந்தன் உயிரென்று!

2 comments:

Unknown said...

oi nice kavithai alaga iruku

Jayashree said...

very touching one