Monday, January 18, 2010

சின்னஞ்சிறு கவிதைகள்!


உன் கால் தடங்களில்
என் பாதம் பற்றி நடந்த போது,
நான் செல்ல வேண்டிய தூரம் குறுகியது! 
உன் கை பற்றி நான் நடந்த போது,
குறுகிய தூரம் மறுபடியும் 
நீளாதா என்று தோன்றியது! 

உன்னுடைய ஒவ்வொரு அங்கமும் 
சுவாசிக்கின்றன!  - அதை நான் 
உன் அருகில் நெருக்கமாய் அமர்ந்திருக்கும் போது,
மெலிதான வெப்ப காற்றில் உணர்கிறேன்!

இமை மூடாமல் எனை பார்க்கும் உன் கண்கள்,
இன்று அந்த கன நொடி பொழுதில் ,
கண் சிமிட்டிய போது,
கிட்டதட்ட நான் இறந்து போயிருந்தேன்!

உன் மெல்லிய இதழ்களின் ஈரத்தில்,
என் தாகம் தணியும் எனில்,
இதழ்களை அடிக்கடி உள் வாங்கி 
ஈரப்படுத்தி கொள்!
நான் உயிர் வாழ்வதற்காக!

1 comment:

aarthi said...

super lines....