Monday, January 18, 2010

காதலா? கனவா?




உன்னை சந்தித்த அன்றைய பொழுதின் இரவில்,
மீள முடியா கனவில் சிக்கி கொண்டேன் போல!
இதோ இந்த நொடியில் உன்னை காணும்போதும் கூட 
கனவில் இருப்பதாய் உணர்கிறேன்!
மேகங்களின் கருங்கூந்தலால்,
மின்னல் வெளிச்ச பார்வையினால்,
மழை வருமோ என எண்ணி - ஒதுங்க இடம் தேடி 
உன் சேலை தலைப்பை தேடி அலைகிறேன்!
உன் மெல்லிய மௌன புன்னகை,
இரைச்சல் மிகுந்த இந்த மாநகரத்தில் - எனக்கு 
மட்டும் பெரிதாய் கேட்பது ஏன்? - உண்மையில் 
என் மனம் காதலில் உள்ளதா? -இல்லை 
கனவில் உள்ளதா?
என் அருகில் வந்து,என் கன்னத்தை கிள்ளி 
உணர்த்தி செல் பெண்ணே!

2 comments:

aarthi said...

wow.....super
nalla irruku

nalla kavidhai elludhuringa :-)

Unknown said...

Adada adada..... Kavithai👍