Tuesday, May 26, 2009

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஆதியில் ஒரு நாள்,
தகித்த பூமியில்,
உயிர் வாசம் அறியாத அந்த நாளில்,
யுகம் யுகமாய் மழை பொழிந்ததாம்!
ராட்சச மழையின் இறுதி துளியில்
மஞ்சளா? சிவப்பா? என்று அறிய
முடியா அழகிய நிறத்தில்
மலர் ஒன்று மலர்ந்தது!
அந்த மலரின் சுவாசத்தில்,
உயிரின் சுவாசம் பிறந்தது!
இன்றும் ஓர் மலர் மலர்ந்துள்ளது!
இந்த மலரின் இதழ் வீசிய தென்றலில்
அக்னி வெயிலின் வெப்பம் தணிந்தது!
பட்டாம் பூச்சியின் சிறகுகளுக்கு
வண்ணங்கள் முளைத்தன!
பன்னிரு மாதங்களும்
குளுமையை மட்டுமே காட்டின!
மழலையின் இதயங்கள்
வாழ்த்துக்கள் சொல்லின!
கூடவே நானும் சொன்னேன்,
"என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்."

No comments: